Sunday, December 5, 2010

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் - ஏகேசி நடராஜன்

டெல்லியில் ஸ்பிக் மேகே (SPIC MACAY) அமைப்பு இந்த ஆண்டும் Music in the Park என்கிற அற்புதமான இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள். குளிர்காலத்தின் வார இறுதிகளின் மாலைகளை இசைமயமாக ஆக்கும் அற்புத நிகழ்ச்சி. நவம்பர் 13ம் தேதி டாக்டர் எல்.சுப்பிரமணியத்தின் வயலின் நிகழ்ச்சி, பர்வீன் சுல்தானாவின் இந்துஸ்தானி வாய்ப்பாட்டு, உஸ்தாத் பஹாஉத்தீன் ருத்ர வீணா போன்ற பல அருமையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள்.

நேற்று (04 டிசம்பர் 2010) மாலை கிரிஜா தேவியின் இந்துஸ்தானி இசை இருக்கிறது வருகிறாயா என்று நண்பர் கேட்டார். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஏ.கே.சி.நடராஜன் கிளாரினெட் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த முறை கிரிஜா தேவி வேண்டாம் என்று பார்க்கிறேன் என்று சொன்னேன்.

நண்பர் மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டார். ஏ.கே.சி. இன்னும் வாசிக்கிறாரா? எக்கச்சக்கமா வயதாகியிருக்குமே?