Showing posts with label கடிதங்கள். Show all posts
Showing posts with label கடிதங்கள். Show all posts

Monday, July 15, 2013

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் திரு.பி.கன்னியப்பன் அவர்களின் எதிர்வினை.

தில்லித் தமிழ்ச் சங்க வரலாற்றிலேயே,  ( நான் இருமுறை பொருளாளராக இருந்த   காலம்  உட்பட )  எந்த செயலருக்கும், தலைவருக்கும் தங்கள் நடவடிக்கைகளை திறந்த மனதுடன் ( அதாவது வெளிப்படைத் தன்மையோடு  (- with transparecy ) எந்த உறுப்பினர்களுடனும் பகிர்ந்து கொண்டதாக வரலாறே இல்லை.  அப்படி இருக்க நீங்கள் மட்டும் இப்போது அப்படி அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது ? 


நான் முதல் முறை பதவிக்கு வரும் முன்பாக நடந்த ஒரு பேரவைக் கூட்டத்தில் - சங்கத்தின் செயல்பாடுகள், மாதக் கணக்கு வழக்குகள், எல்லா உறுப்பினர் விபரங்கள் ( இது தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு சமமானது ) - ஆகியவைகள் முதல் கட்டமாக சங்க வரலாற்றில் முதல் முறையாக வலயத்தில்  ஏற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தேன்.  நான் பதவி ஏற்ற பிறகு  அத்தனை விபரங்களும் கணணி  மயமாக்கப்பட்டும் - அதனை செய்ய விட்டார்களா? உரிய பயனர்  மற்றும் கடவுச் சொல்லுடன்.  சிதறிக் கிடந்த ( அதாவது பல முறை செயலராக இருந்து  தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும், தன உதவியின்றி பிறர் வாக்காளர் விபரம் பெறக் கூடாது என்று ரகசியமாக வைத்திருந்த  திரு. கிருஷ்ணமூர்த்தியின்) உறுப்பினர் விபரத்தைத் தரம் பிரித்து- அதாவது சாதாரண உறுப்பினர், அசோசியட் உறுப்பினர், ஆயுள் உறுப்பினர், Patron உறுப்பினர் என்பதையெல்லாம் தரம் கண்டு அவைகளைப் பிரித்து முறையே - அடையாளக் குறியாக உறுப்பினர் எண்ணுக்கு முன்      O, A, L and P என்று குறிப்பிட்டு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் வழங்கினோம்.  இன்று வரை அதுதான், நான் வகுத்த அந்த முறை தான் அடிப்படையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.