Thursday, February 16, 2012

அணைந்து போன சினத்தீ - ஏ.ஆர்.ராஜாமணி

மூச்சே நின்று போவது போல மிக அழுத்தமாகக் காற்றை உள்வாங்கி ஒலி எழுப்பிச் சிரிக்கும் ஏ.ஆர்.ராஜாமணியின் சிரிப்பு இப்போது நம்மிடையில் இல்லை.  

திங்கட்கிழமை (13 பிப்ரவரி 2012) அன்று சவக்கிடங்கில் இருந்து  பெற்றுக் கொண்டபோது அந்தச் சிரிப்பு வாய் பிளந்து உறைந்து போயிருந்தது.  அந்தச் சிரிப்போடு பிளந்திருந்த வாயுடன்தான் அந்த மனிதனுக்கு கரோல்பாக் மயானத்தில் சிதை மூட்டினேன்.

மீண்டும் பழைய கூட்டில்...

இந்தப் பக்கங்களில் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.  தனி இணையதளத்துக்குப் புதுக்குடித்தனம் போனதால் இந்த வீடு நீண்ட காலமாகப்  பூட்டிக் கிடந்தது.  

இப்போது அந்த வீட்டை யாரோ சில பங்களாதேஷ் விஷமிகள் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   திங்கட்கிழமை என்னுடைய வலைத்தளத்தை திறந்தபோது தொடர்பே இல்லாமல் என்னென்னவோ வந்தது.  சில படங்களில் கெட்ட காரியங்களும் இருந்தன-  அடி வயிறு கலங்கி விட்டது.