அர்விந்த் கெஜ்ரிவால் இழைத்த அரசியல் பிழையினால் ஒரு வருடத்துக்குள்
டெல்லி மக்களாகிய நாங்கள் இன்று மீண்டும் ஒருமுறை
வாக்களிக்கும் பாக்கியத்தை பெற்றோம்.
நான் வாக்களித்த சாவடி அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புது டெல்லியின்
மையமான சாவடிகளில் ஒன்று. காலையில் சுமார்
10.00 மணிக்கு நிதானமாக நாஷ்டா முடித்து விட்டு வாக்குச் சாவடிப் பக்கம் எட்டிப் பார்த்தால்
சாவடியில் தேர்தல் அதிகாரிகள் சாவகாசமாக பிரெட் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எந்த வரிசையும் கிடையாது. நிதானமாக சென்று நானும் என் மகளும் டெல்லியின் தலையெழுத்தை
நிர்ணயிக்கும் டெல்லியின் வாக்காளர்களாக அதிகாரபூர்வமாக பதிவு பெற்ற 1.19 கோடி மக்களில் இருவரானோம்.
என்னைப் போன்று நாற்காலியில் உட்கார்ந்து கோஷ்டி விளையாட்டுக்களை
வேடிக்கை பார்க்கும் மற்ற நாற்காலிக்காரர்கள் ஒவ்வொருவராக இந்த கோஷ்டி விளையாட்டில்
பங்கேற்க வந்து கொண்டிருந்தார்கள்.
வாக்குச் சாவடியில் இருந்து வெளியேறும் போது இடது கை ஆட்காட்டி விரலை ஆகாயம் நோக்கிக் காட்டி ஏதோ கெட்ட ஜாடை செய்வது போலவும் டெல்லிக்கு ஆப்பு வைத்து முடித்தாகி விட்டது என்று கூறாமல் கூறுவது போலவும் ஆளாளுக்கு ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்ள மேல்நோக்கிய இடது கை ஆட்காட்டி விரலுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள்.
வாக்குச் சாவடியில் இருந்து வெளியேறும் போது இடது கை ஆட்காட்டி விரலை ஆகாயம் நோக்கிக் காட்டி ஏதோ கெட்ட ஜாடை செய்வது போலவும் டெல்லிக்கு ஆப்பு வைத்து முடித்தாகி விட்டது என்று கூறாமல் கூறுவது போலவும் ஆளாளுக்கு ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்ள மேல்நோக்கிய இடது கை ஆட்காட்டி விரலுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள்.
2013-ம் ஆண்டில் இதே வாக்குச் சாவடியில் நீண்ட நேரம் வரிசையில்
நின்று வாக்களித்த நினைவு இருக்கிறது. என்னைப் போலவே பலரும் நீண்ட வரிசைகளில் தவிப்புடனும்
சலிப்புடனும் அப்போது வரிசையில் நின்றிருந்தனர்.
அந்த தேர்தலில் இளைய தலைமுறையினர்
அதிகமாக இருந்தார்கள். உற்சாகமாகக் கலந்து
கொண்டார்கள். வாக்குச் சாவடிகளுக்கு வெளியில்
ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பெருந்திரளாகக் குழுமியிருந்தார்கள். இப்போது அப்படி ஒன்றும் பெரிய கூட்டம் எல்லாம் இல்லை.
வாக்காளர்களை விட போலீஸ்காரர்கள் அதிகமாக இருந்தார்கள்.

