Monday, July 15, 2013

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் திரு.பி.கன்னியப்பன் அவர்களின் எதிர்வினை.

தில்லித் தமிழ்ச் சங்க வரலாற்றிலேயே,  ( நான் இருமுறை பொருளாளராக இருந்த   காலம்  உட்பட )  எந்த செயலருக்கும், தலைவருக்கும் தங்கள் நடவடிக்கைகளை திறந்த மனதுடன் ( அதாவது வெளிப்படைத் தன்மையோடு  (- with transparecy ) எந்த உறுப்பினர்களுடனும் பகிர்ந்து கொண்டதாக வரலாறே இல்லை.  அப்படி இருக்க நீங்கள் மட்டும் இப்போது அப்படி அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது ? 


நான் முதல் முறை பதவிக்கு வரும் முன்பாக நடந்த ஒரு பேரவைக் கூட்டத்தில் - சங்கத்தின் செயல்பாடுகள், மாதக் கணக்கு வழக்குகள், எல்லா உறுப்பினர் விபரங்கள் ( இது தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு சமமானது ) - ஆகியவைகள் முதல் கட்டமாக சங்க வரலாற்றில் முதல் முறையாக வலயத்தில்  ஏற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தேன்.  நான் பதவி ஏற்ற பிறகு  அத்தனை விபரங்களும் கணணி  மயமாக்கப்பட்டும் - அதனை செய்ய விட்டார்களா? உரிய பயனர்  மற்றும் கடவுச் சொல்லுடன்.  சிதறிக் கிடந்த ( அதாவது பல முறை செயலராக இருந்து  தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும், தன உதவியின்றி பிறர் வாக்காளர் விபரம் பெறக் கூடாது என்று ரகசியமாக வைத்திருந்த  திரு. கிருஷ்ணமூர்த்தியின்) உறுப்பினர் விபரத்தைத் தரம் பிரித்து- அதாவது சாதாரண உறுப்பினர், அசோசியட் உறுப்பினர், ஆயுள் உறுப்பினர், Patron உறுப்பினர் என்பதையெல்லாம் தரம் கண்டு அவைகளைப் பிரித்து முறையே - அடையாளக் குறியாக உறுப்பினர் எண்ணுக்கு முன்      O, A, L and P என்று குறிப்பிட்டு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் வழங்கினோம்.  இன்று வரை அதுதான், நான் வகுத்த அந்த முறை தான் அடிப்படையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.