Thursday, March 5, 2015

ஆவணப்படத்துக்கான தடையும் ஊடக பயங்கரவாதத்தின் ஓநாய் முகமும்…


இன்று (5 மார்ச் 2015) காலை பிபிசி நிறுவனத்துக்காக எடுக்கப்பட்ட நிர்பயா பற்றிய ஆவணப்படம் யூடியூபில் கிடைக்கிறது என்று சில நண்பர்கள் கூறியதும் பரபரப்பாக இருந்தது.  இந்தப் படத்தை திரையிடுதல் மற்றும் ஒளிபரப்புதல் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் வழியாக அரசாங்கம் தடை ஆணையைப் பெற்றதால் இதனை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் நிறுத்த வாய்ப்பு இருக்கிறது என்ற பயத்துடனேயே இந்த ஆவணப்படத்தை காண நேர்ந்தது.

இந்த ஆவணப்படத்தின் மீதான என்னுடைய முதல் எதிர்வினையை சொல்ல வேண்டுமென்றால் எனக்குக் கிட்டிய பெரும் அதிர்ச்சியைத்தான் பகிர்ந்து கொள்ளவேண்டும். 

இந்தத் துயரமும் மனக்கிலேசமும் அளித்து வரும் சம்பவத்தைப் பற்றியும்   இந்த சம்பவம் தொடர்பான போராட்டங்கள், பல்வேறு எதிர்வினைகள், வழக்கு விபரங்கள் ஆகியவற்றை ஒரு பத்திரிகையாளனாக தொடர்ந்து கண்காணித்து இருந்தாலும் இந்த சம்பவத்தைப் பற்றிப் படம் முழுதும் பரவலாகப் பேசும் இப் படத்தின் நேரடித்தன்மை என்னை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது என்றுதான் கூறவேண்டும்.