Saturday, May 19, 2012

மீண்டும் பாரதமணி

கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக பலத்த பொருளாதார நெருக்கடியிலும் எவ்வித சமரசங்களையும்  செய்து கொள்ளாது விடாப்பிடியாக காந்திய நெறிகளைப் போற்றும் கட்டுரைகள் மற்றும் படைப்புக்களைத் தாங்கி வெளிவரும் பாரதமணி இதழ் தேசிய அளவில் நம்முடைய மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமை அளிக்கும் இதழியல் செயல்பாடாகும்.  வெள்ளிவிழா காணும் பாரதமணிக்கும் அதன் ஆசிரியர் பெரியவர் சீனுவாசனுக்கும் எங்கள் தலைவணக்கங்கள்.  பாரதமணி பிப்ரவரி இதழில் ஆசிரியர்  பாரதமணி சீனுவாசன்  அந்த இதழை நிறுத்தப்போவதாக அறிவித்து இருந்தார்.    அந்தச் செய்தி மிகவும் வருத்தம் அளித்தது.  வடக்கு வாசல் இதழில் திரு.சீனுவாசன் அவர்களின் அறிவிப்பு குறித்து பதிவு செய்திருந்தோம்.  காந்தியச் சுவட்டில் வெளிவரும் ஒரு இதழ் நின்றுபோவது பெரும் வருத்தம் அளித்தது.