Saturday, October 12, 2013

நான் மட்டும் இல்லையப்பா... அவனும்தான்...

எனக்கு ஒரு குட்டிக் கதை ஞாபகத்துக்கு வருகிறது.

தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தான் மாப்பிள்ளை. இருவரும் வெளியில் கடைக்குக் கிளம்பினார்கள். வழியில் மாமனாருக்குக் கடன் கொடுத்திருந்த ஒருவன் எதிர்பாராமல் எதிர்ப்பட்டு மாமனாரின் சட்டையைப் பிடித்துக் கொண்டான். மாமனாருக்கு தர்மசங்கடமாகி விட்டது. சமாளிக்கும் வகையில் சொன்னான்.

“உனக்கு எப்படா கடன் கொடுக்கணும்? குடுக்கலைன்னா என்னடா பண்ணுவே?”

“இப்படி எல்லாம் பேசினா உன்னை செருப்பாலேயே அடிப்பேன்”

“தைரியம் இருந்தால் அடிடா பார்ப்போம்”

கடன் கொடுத்தவன் சடாரென்று செருப்பை உருவி பளீரென்று ஒன்று கொடுத்தான்.

மாமனார் அரண்டுவிட்டாலும் சமாளித்தான்.

என்னை அடிச்சிட்டே... தைரியம் இருந்தா என் மாப்பிள்ளை மேலே கை வைடா பார்ப்போம்...

“உன் மாப்பிள்ளை என்னடா புடுங்கி. இப்ப பாரு” என்று மாப்பிள்ளையையும் இரண்டு வெளுவெளுத்தான்.

சரி வாங்க மாப்பிள்ளை போகலாம் என்று மாப்பிள்ளையை அழைத்துச சென்றான் மாமனார்.

மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் மாமனார் செருப்படி பட்டான் என்று சொல்ல முடியாது பாருங்கள். அவனும் பட்டிருக்கிறானே.

ஏறத்தாழ இதுபோன்ற வேலைதான் டெல்லி தமிழ்ச் சங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது என்று தோன்றுகிறது. தமிழ்ச் சங்கத்தின் செயலாளரின் செட்டப் பட்டம் மற்றும் விருது வாங்கும் சுயமோகம் நாளுக்கு நாள் அதிகரித்து ஏறத்தாழ மனோவியாதி போல மாறிவிட்டது.

யாராவது இரண்டு பேர் சேர்ந்து கிடைத்தாலும் உடனடியாக அந்த இருவருக்கும் கற்பனையான அமைப்பு ஒன்றை உருவாக்கி அவர்கள் வழியாக தனக்கு செட்டப் விருதுகள் மற்றும் பாராட்டுக்களை உடனடியாக ஏற்பாடு செய்து கொள்ளும் அவருடைய சுயமோகம் குறித்து மூலைக்கு மூலை (சிலருக்கு தைரியம் இல்லைவிட்டாலும் மறைமுகமாவது) கிண்டல் செய்து வருகிறார்கள்.

பலரும் மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என்பது அவருக்கும் தெரியும்.

என்னைப் போன்றவர்கள் இதைப் பார்த்து சத்தம் போட்டு சிரித்தாலும் பொறாமையில் சிரிக்கிறான் என்று தன்னுடைய ஜால்ராக்களை விட்டுக் கூறவைக்கிறார். அவர்களும் தங்கள் முன்பு எறியப்படும் சில பிஸ்கட்டுக்களுக்காக நேரம் கிடைக்கும் போது என்னைக் கடித்து குதற சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருக்கிறார்கள். சிலர் ஏற்கனவே பலமாக் கடித்தும் விட்டார்கள்.

சரி. விஷயத்துக்கு வருகிறேன்.

இந்த செட்டப் விருதுகளை வைத்து தன்மேல் எழும் கடுமையான விமர்சனங்களை சமாளிக்க ஒரு வழியைக் கண்டுவிடித்து விட்டார் தமிழ்ச் சங்கதிதின் செயலாளர் என்று தோன்றுகிறது. இப்போது தன்னுடன் கூட இருக்கும் தொண்டரடிப் பொடியாழ்வார்களுக்கும் அதே போல செட்டப் விருதுகள் ஏற்பாடுசெய்யத் தொடங்கிவிட்டார்.

தங்கள் கழுத்துக்களில் ஜவ்வந்தி மாலையும் தலையில் மஞ்சள் தண்ணீரும் தெளிக்கப்படுவதை உணர்ந்து கொள்ளாமல் இப்போது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சில செயற்குழு ஜம்பவான்கள் தங்கள் செயலாளரைப் போலவே
செட்டப் விருதுகளை வாங்கி பெரிதாக ஃப்ளெக்ஸ் பேனர்களும் வைத்துக் கொள்ளத் துவங்கி விட்டார்கள்.

நாளை செயலரை மட்டும் தனியாக யாரும் விமர்சிக்க முடியாது இல்லையா? ஏம்பா. நான் மட்டும் தான் விருதுகள் வாங்கினேனா? ஒண்ணுக்கும் லாயக்கில்லாத இவன்களும் வாங்கலையா? என்று கேட்கலாமே.

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் இனி இப்படி நிறைய கேளிக்கை அம்சங்கள் கிடைக்கும்.

ஹை.. ஜாலிதான்.

No comments:

Post a Comment