மனசுக்குள் ஒரு மழைச்சாரல் - ஏகேசி நடராஜன்
நேற்று (04 டிசம்பர் 2010) மாலை கிரிஜா தேவியின் இந்துஸ்தானி இசை இருக்கிறது வருகிறாயா என்று நண்பர் கேட்டார். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஏ.கே.சி.நடராஜன் கிளாரினெட் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த முறை கிரிஜா தேவி வேண்டாம் என்று பார்க்கிறேன் என்று சொன்னேன்.
நண்பர் மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டார். ஏ.கே.சி. இன்னும் வாசிக்கிறாரா? எக்கச்சக்கமா வயதாகியிருக்குமே?
வயதாகி இருந்தது. மேடையில் வந்து அமரும்போது தளர்வுடன் தான் இருந்தார். ஆனால் கிளாரினெட்டைத் தூக்கியதும் ஏ.கே.சி. வாசிக்கவில்லை. ஏதேதோ மாயங்கைளை நிகழ்த்தினார். வாணவேடிக்கை காண்பித்தார். கேட்டவர்களை உருக வைத்தார். உற்சாகம் கொள்ள வைத்தார்.
இத்தனை இறுக்கமாக முகத்தை வைத்திருக்கும் ஒரு மனிதருக்குள் இத்தனை பிரம்மாண்டமான இசைப் பிரவாகமா என்று உருகி உருகிக் கேட்க வைத்தது அவருடைய வாசிப்பு.
மேலும்...
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
ReplyDeleteகீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !