லாலு பாய் ஒரு வழியாக டெல்லியில் பல ஆண்டுகளாக விடாப்பிடியாக பிடித்து
வைத்துக் கொண்டிருந்த அரசு பங்களாவை சென்ற
மாதம் காலி செய்திருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.
கடந்த 2004-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராகப்
பொறுப்பேற்ற போது புது டெல்லியின் 25 துக்ளக் ரோடு என்னும் முகவரியில் உள்ள இந்த பங்களாவில் அவர் குடியேறினார்.
கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி இழப்புக்குப் பிறகு விதிமுறைகளின் அடிப்படையில் டெல்லியில் அவர் அரசு பங்களாவில் தங்க முடியாது ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இவருடைய வாய்க்கு பயந்து அமைச்சரவைக் கூட்டத்தில் வயிற்றெரிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றி ஒரு ஆண்டு காலத்துக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி இழப்புக்குப் பிறகு விதிமுறைகளின் அடிப்படையில் டெல்லியில் அவர் அரசு பங்களாவில் தங்க முடியாது ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இவருடைய வாய்க்கு பயந்து அமைச்சரவைக் கூட்டத்தில் வயிற்றெரிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றி ஒரு ஆண்டு காலத்துக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இறுதியாக 2014 அக்டோபர் வரை இந்த சலுகை முடிவடைந்ததும் அந்த பங்களாவை
காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருந்தது மத்திய அரசு. தன்னுடைய உடல் நலத்தைக் காரணம் காட்டியும் பேரப்பிள்ளைகளின்
படிப்பை காரணம் காட்டியும் மேலும் கால அவகாசம் கோரியிருந்தார் லாலு.
இது தொடர்பாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து லாலு கோரிக்கை விடுத்ததாகவும் அந்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.