Wednesday, September 29, 2010

ஊஉஸூலா தலைவலி - அரசியின் அலங்காரக் கைக்கோல்...

ஏற்கனவே அறிவித்தபடி டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுக்கள் முடியும் வரை அந்த விளையாட்டு ஏற்பாடுகள் மற்றும் தலைநகரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த பதிவுகளை என்னுடைய வலைத்தளத்தில் எழுதும் தொடரின் மூன்றாவது நாள் கட்டுரை இது,

1982ல் ஏசியாட் நடந்த போது டெல்லியில் இருந்தேன். அப்போது நடந்தவை ஏறத்தாழ யாருக்கும் நினைவில் இல்லை. எனவே இன்றைய வலைத்தள வசதிகளை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் நடப்பவற்றை இங்கே பதிவு செய்யலாம் என நினைத்தேன்.

இதில் புதிதாக ஒன்றும் இல்லை. நீங்கள் ஊடகத்தில் காண்பவைதான்., செய்தித்தாள்களில் படிப்பவைதான்.

ஆனால் இவற்றை ஆறுமாதம் கழித்து நீங்கள் படிக்கும் போது இதன் சுவாரசியம் உங்களுக்குப் புரியும்.

ஆறுமாதம் கழித்தே எழுதலாமே என்று நீங்கள் கேட்கலாம், அப்போது எனக்கு எதுவும் நினைவில் இருக்காது. ஏன் என்றால், நான் பதிவு செய்பவை எல்லாம் மிகவும் அல்பமான அக்கப்போர்கள்.

http://www.kpenneswaran.com

அன்புடன்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

No comments:

Post a Comment