Thursday, September 30, 2010

ஆட்டம் துவங்க இன்னும் மூன்றே நாட்கள்...

இந்தத் தொடரைத் தொடங்கிய நான்காவது நாள் இது. நீங்கள் நேரடியாக இன்று இந்தக் கட்டுரைக்கு வந்திருந்தால் உங்களுக்காக ஒரு முக்கியமான குறிப்பு.

நான் டெல்லியில் வசித்து வருவதால் காமன்வெல்த் போன்ற முக்கியமான நிகழ்வு நடக்கும்போது அந்த நேரத்தில் இந்த நகரத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைப் பதிவு செய்வதுதான் என்னுடைய நோக்கம்.

1982 டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது நான் இங்கிருந்தேன். அப்போது இதுபோன்று பதிவு செய்யும் வசதி எல்லாம் இல்லை. அந்தப் போட்டிகளுக்கு இருவாரங்களுக்கு முன்பு இந்த நரகம் என்ன களேபரங்களை சந்தித்தது என்று இப்போதும் யோசித்துப் பார்க்கிறேன். தனிப்பட்ட நிகழ்ச்சிகள் எவையும் என் நினைவில் சுத்தமாக இல்லை. அப்போது இங்கிருந்த நண்பர்கள் பலரிடமும் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் என்னைப் போலவே முழிக்கிறார்கள். எனவே இப்போது இணையம் அளிக்கும் வசதியைப் பயன்படுத்தி இந்த நாட்களைப் பதிவு செய்யும் வேலையைச் செய்யலாம் என்று முன்வந்திருக்கிறேன்.

இங்கு நான் எழுதுகிறவற்றை மிகவும் விரிவாக காட்சி ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் நீங்கள் காணலாம், அவற்றின் ஒருவகையான சுருக்கத்தையும் நான் நேரில் கண்ட சிலவற்றை மட்டுமே இங்கே பதிகிறேன், அவை குறித்த சில பிரத்யேகமான விமர்சனங்களையும் எங்காவது லேசாகத் தொட்டுச் செல்கிறேன்.

இவை இப்போது உங்களுக்குக் கண்டிப்பாக சுவாரசியமாக இருக்காது. அடுத்த மாதத்துக்கு அடுத்த மாதம், அதாவது நவம்பர் மாதத்தில் இந்தப் பதிவுகளை மொத்தமாகப் படித்துப் பாருங்கள். ஒரு சில நாட்கள் கழித்து எப்போதாவது படிக்கும்போது இந்தப் பதிவுகள் அட, இப்படியுமா நடந்தது என்று உங்களுக்குத் தோன்றலாம்.

அந்த ஒரு சில நாட்கள் கழித்தே இதனை எழுதலாமே என்று நீங்கள் கேட்கலாம்.

அப்போது உங்களைப் போலவே எனக்கும் எல்லாம் மறந்து போயிருக்கும்.


சரி. இனி இன்றைய பதிவு.

No comments:

Post a Comment