கர்நாடகத்தில் காங்கிரசும் குமாரசாமியும் எவ்வித உட்டாலங்கடி வேலைகளையும் முயற்சிக்காததால் எடியூரப்பா தலைமையில்தான் அரசு அமையும் என்று உறுதிப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநில மக்களை விட தமிழகத்தின் எல்லைப் பகுதியான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கர்நாடகாவில் அமையப்போகும் ஆட்சி குறித்து மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.
தமிழக முதல்வரும் கர்நாடகாவில் புதிய ஆட்சி பொறுப்பேற்கும் வரை ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திப் போடலாம் என்று அறிவித்தார். அப்போது ஒகேனக்கல் திட்டத்தை எதிர்த்து பரிசல் ஏறி வந்து ரகளையில் ஈடுபட்டவரே இப்போது முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.
தேர்தலை எதிர்பார்த்து இருந்த அந்த நேரத்தில் எடியூரப்பா அப்படி செய்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது. முதல்வராக இப்போது என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க வேண்டும். தமிழக பாஜக வினர் இந்த விஷயத்தில் என்ன மாதிரியான நிலைப்பாடு எடுப்பார்கள் என்பது அனைவராலும் கவனிக்கப்படக் கூடிய விஷயமாக இருக்கும்.
ஒகேனக்கல் திட்டடத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்திவைத்த கெடு அநேகமாக முடிவுக்கு வந்து விட்டது.
இப்போது கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா நடந்து கொள்வதைப் பொறுத்து தமிழக அரசுக்கும் நெருக்கடிகள் அமையும். ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழக அரசுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் எதிராக மேடையை துவம்சம் செய்வதற்கான விஷயங்கள் கிடைக்கும். அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். கர்நாடகாவைப் பொறுத்த அளவில், எடியூரப்பா இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் அங்குள்ள எதிர்க்கட்சிகள் விஷயத்தைக் கையில் எடுத்து ரகளையைத் துவங்கி விடும். அவர்களுக்கும் எடுத்த எடுப்பில் ஒரு எதிர்ப்புக்கான விஷயம் கையில் கிடைத்த கொண்டாட்டம்தான்.
இந்த விஷயத்தை ஒரு பொதுநோக்குடன் அணுகாது, அரசியல் நோக்குடன் அணுகினால் இதுவும் காவிரியைப் போலவே பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் இழுத்துக் கொண்டே போகும் அபாயம் இருக்கிறது.
இந்த அரசியல் விளையாட்டினால் கர்நாடகத்தில் இப்போதைக்கு எதிர்க் கட்சி அணியில் அமரப்போகும் காங்கிரசுக்கும், குமாரசாமிக்கும் தமிழகத்தில் ஜெயலலிதா வகையறாக்களுக்கும் கொண்டாட்டம்தான்.
ஆனால் தவிக்கப்போவது என்னவோ, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அப்பாவி மக்கள்தான்.
தமிழக முதல்வரும் கர்நாடகாவில் புதிய ஆட்சி பொறுப்பேற்கும் வரை ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திப் போடலாம் என்று அறிவித்தார். அப்போது ஒகேனக்கல் திட்டத்தை எதிர்த்து பரிசல் ஏறி வந்து ரகளையில் ஈடுபட்டவரே இப்போது முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.
தேர்தலை எதிர்பார்த்து இருந்த அந்த நேரத்தில் எடியூரப்பா அப்படி செய்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது. முதல்வராக இப்போது என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க வேண்டும். தமிழக பாஜக வினர் இந்த விஷயத்தில் என்ன மாதிரியான நிலைப்பாடு எடுப்பார்கள் என்பது அனைவராலும் கவனிக்கப்படக் கூடிய விஷயமாக இருக்கும்.
ஒகேனக்கல் திட்டடத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்திவைத்த கெடு அநேகமாக முடிவுக்கு வந்து விட்டது.
இப்போது கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா நடந்து கொள்வதைப் பொறுத்து தமிழக அரசுக்கும் நெருக்கடிகள் அமையும். ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழக அரசுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் எதிராக மேடையை துவம்சம் செய்வதற்கான விஷயங்கள் கிடைக்கும். அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். கர்நாடகாவைப் பொறுத்த அளவில், எடியூரப்பா இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் அங்குள்ள எதிர்க்கட்சிகள் விஷயத்தைக் கையில் எடுத்து ரகளையைத் துவங்கி விடும். அவர்களுக்கும் எடுத்த எடுப்பில் ஒரு எதிர்ப்புக்கான விஷயம் கையில் கிடைத்த கொண்டாட்டம்தான்.
இந்த விஷயத்தை ஒரு பொதுநோக்குடன் அணுகாது, அரசியல் நோக்குடன் அணுகினால் இதுவும் காவிரியைப் போலவே பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் இழுத்துக் கொண்டே போகும் அபாயம் இருக்கிறது.
இந்த அரசியல் விளையாட்டினால் கர்நாடகத்தில் இப்போதைக்கு எதிர்க் கட்சி அணியில் அமரப்போகும் காங்கிரசுக்கும், குமாரசாமிக்கும் தமிழகத்தில் ஜெயலலிதா வகையறாக்களுக்கும் கொண்டாட்டம்தான்.
ஆனால் தவிக்கப்போவது என்னவோ, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அப்பாவி மக்கள்தான்.
சுடச்சுட நிகழப்போவதை தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஅன்று பரிசல் ஏறியவர் இன்று பதவியில் ஏறி இருக்கிறார்.
என்ன நடக்கும்? விடைதெரியா கேள்வியுடன்
நாங்களும்!
ஆல்பர்ட்,
அமெரிக்கா.
உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி, ஆல்பர்ட்.
ReplyDeletesir,
ReplyDeleteThis comment about Karnadaga govt.
"o i see !!!"
saravanan
Madurai