Monday, September 20, 2010

என் புதிய வலைத்தளம்


அன்புள்ள நண்பர்களுக்கு

வணக்கம்.

இந்த வலைப்பூவில் எழுதிக் கொண்டு இருந்தபோது சற்று நிறுத்தி வடக்கு வாசல் இணையதளத்தின் வாசகப் பரப்பைப் பரவலாக்க ராகவன் தம்பி பக்கங்கள் என்ற பெயரில் எழுதிக் கொண்டு இருந்தேன்.

ராகவன் தம்பி பக்கங்கள் துவங்கிய நேரம், டெல்லி தமிழ்ப் பள்ளிகளில் உள்ள பிரச்னைகளை தொடர்ச்சியாக எழுதி வந்தேன். தமிழ்ப் பள்ளிகளின் மேலாண்மை குறித்த பல்வேறு பிரச்னைகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். பள்ளியின் முன்னாள் மாணவர்களும் பள்ளி நலனில் அக்கறை கொண்ட நண்பர்களும் பெருத்த அளவில் ஆதரவு நல்கினார்கள். அவர்களின் ஆதரவு டெல்லித் தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகக் குழுவில் பிரதிபலித்தது.

பள்ளியின் நிர்வாகத்தில் மாற்றம் வந்தது. அது மட்டுமில்லாமல் ஒரு நல்ல விழிப்புணர்வும் வந்தது. பலரும் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு உதவுவதற்கு முன்வந்தார்கள். வந்து கொண்டிருக்கிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.

வடக்கு வாசல் இதழின் பக்கங்கள் வடக்கு வாசல் இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி வலையேற்றப்படுகிறது. அந்த இதழின் இணைய பக்கங்களில் தேவையில்லாமல் என்னுடைய இடையீடு இருப்பது போலத் தோன்றியது.

அது மட்டுமல்லாது வடக்கு வாசல் இணையதளத்தை மாதம் ஒருமுறை படிக்கும் வண்ணம் இருக்கிறது. இப்போது அதனை சற்று மேம்படுத்தும் திட்டம் இருக்கிறது. விரைவில் வாரம் ஒருமுறை இலக்கியம், அரசியல், சினிமா, கலை, இசை போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த பதிவுகளை சேர்க்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதனால் வடக்கு வாசல் பக்கங்களில் இருந்து ராகவன் தம்பி பக்கங்களைத் தனியாகப் பிரித்தெடுக்க முடிவுசெய்தேன். அதன் விளைவு இப்போது ஒரு புதிய இணையதளத்தை என்னுடைய பதிவுகளுக்காக பிரத்யேகமாகத் துவங்கியிருக்கிறேன்.

www.kpenneswaran.com என்னும் இந்த இணையதளத்தில் இனி வாரம் மூன்று கட்டுரைகள் எழுதலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். என்னுடைய சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கள், நாடகங்கள், திரை விமர்சனம், நூல் விமர்சனம் எனப் பல்வேறு தலைப்புக்களில் என்னுடைய பதிவுகள் தொடரும்.

இந்தப் புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு தேவை.

இந்தப் புதிய இணையதளத்தைத் துவங்கியிருக்கும் நேரத்தில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சங்கச் சுடரில் சனிமூலை வலைப்பூ பற்றிய அறிமுகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே இப்போது இதனை விடுவதற்கு மனது இல்லை. வழக்கப்படி சனிமூலையும் உயிர்ப்புடன் தொடரும்.

உங்களை என்னுடைய இன்னொரு வீடான (சின்ன வீடு என்று சொன்னால் கோபிததுக் கொள்வீர்களா?) என்னுடைய இணையதளம் www.penneswaran.com வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்

கி.பென்னேஸ்வரன்
20 செப்டம்பர் 2010

2 comments:

  1. The arrangements made in en puthia valaththalam are good. The3 fee3d back in the blog will be appreciated by7 one and all who are very fond of writtings readers of Shri K.Penneswaran.I will also read them and comments w ill be sent in future. Please accept my appreciations in this regard

    ReplyDelete