
கடந்த பல மாதங்களாக இசைக்குறுந்தகடு வெளியீடு, ட்ரெயிலர் வெளியீடு, அது குறித்த சிறப்புக் காட்சிகள் என்று தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் மீது தொடர்ச்சியாக ஒருவகையான மனோரீதியான தாக்குதலை நிகழ்த்தி வந்த எந்திரா திரைப்படம் ஒருவழியாக இப்போது திரைக்கு வந்துள்ளது.சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்புக்கள் வழியாக மட்டுமன்றி அநேகமாக இந்தியாவின் அனைத்து மொழி சார்ந்த ஊடகங்கள் வழியாகவும் திரைப்படம் பார்ப்பவர்களின் ஒரு வகையான மிகப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு கலந்த கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டது. இந்தக் கருத்து உருவாக்கத்தினை வலுவாகத் திணிப்பதில் சன் பிக்சர்ஸ் மற்றும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய வணிக நிறுவனங்களின் வியாபார தந்திரம், அதை ஒட்டிய ஆடம்பரம் கலந்த அணுகுமுறை போன்றவை இந்தத் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே அனைத்துத் தரப்பிலும் பெருத்த எதிர்பார்ப்பினை உருவாக்கி வைத்தது.
மேலும் வாசிக்க

மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment