Monday, October 4, 2010

ஆடம்பரத்தின் குரூர வெளிப்பாடு - எந்திரன்


கடந்த பல மாதங்களாக இசைக்குறுந்தகடு வெளியீடு, ட்ரெயிலர் வெளியீடு, அது குறித்த சிறப்புக் காட்சிகள் என்று தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் மீது தொடர்ச்சியாக ஒருவகையான மனோரீதியான தாக்குதலை நிகழ்த்தி வந்த எந்திரா திரைப்படம் ஒருவழியாக இப்போது திரைக்கு வந்துள்ளது.சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்புக்கள் வழியாக மட்டுமன்றி அநேகமாக இந்தியாவின் அனைத்து மொழி சார்ந்த ஊடகங்கள் வழியாகவும் திரைப்படம் பார்ப்பவர்களின் ஒரு வகையான மிகப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு கலந்த கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டது. இந்தக் கருத்து உருவாக்கத்தினை வலுவாகத் திணிப்பதில் சன் பிக்சர்ஸ் மற்றும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய வணிக நிறுவனங்களின் வியாபார தந்திரம், அதை ஒட்டிய ஆடம்பரம் கலந்த அணுகுமுறை போன்றவை இந்தத் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே அனைத்துத் தரப்பிலும் பெருத்த எதிர்பார்ப்பினை உருவாக்கி வைத்தது.

மேலும் வாசிக்க



நேற்று (03 செப்டம்பர் 2010) காமன்வெல்த் போட்டிகளின் துவக்க விழாக்களை தொலைக்காட்சியில் கண்டு களித்து இருப்பீர்கள். அநேகமாக உலகின் பல பகுதிகளிலும் இந்தத் துவக்க நிகழ்ச்சியை மிகவும் ஆவலாகப் பார்த்து ரசித்து இருப்பார்கள். மிகவும் கோலாகலமாகவும் அழகாகவும் அமைந்திருந்தது விழா. எந்த வகையிலும் தொய்வில்லாது மிகவும் சுவாரசியமாகவும் பார்க்கும்போதே ஒருவகையான பெருமிதத்தையும் பெருமையையும் அளித்த விழா அது என்று சொல்லவேண்டும். இந்தக் கொண்டாட்டங்களை நேரில் பார்த்தவர்களை விட என்னைப் போல நிம்மதியாக சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொரிக்க பலகாரங்களும் சூடான டீயும் வைத்துக்கொண்டு பார்த்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். விழா நடந்த நேரு கலையரங்கில் பயங்கர கெடுபிடிகள். முந்தைய கட்டுரையில் எழுதியது போல ஒரு போருக்கு ஆயத்தம் செய்து கொள்ளும் கோட்டையைப் போல நிகழ்ச்சி நடக்கும் நேரு கலையரங்கம் கடந்த ஒரு வாரமாக இருந்தது.

மேலும் வாசிக்க...

No comments:

Post a Comment