 டெல்லியில்  நடந்த காமன்வெல்த் விளையாட்டுக்களைப் பற்றி விளையாட்டாக எழுத  ஆரம்பித்தேன்.  விளையாட்டு பற்றி எழுதமாட்டேன் என்றும் விளையாட்டைச் சுற்றி  இருக்கும் அரசியலையும் அக்கப்போர்களைப் பற்றி மட்டுமே எழுதுவேன் என்று  சொல்லியே ஆரம்பித்தேன்.  சொன்னது போலவே அதைப் பற்றித்தான்  எழுதியிருக்கிறேன்.  நான் எழுதியதற்கும் மேல் பலமடங்கு நீங்கள்  தினசரிகளிலும் காட்சி ஊடகங்களிலும் நீங்கள் இன்னும் சுவாரசியமான பல  விஷயங்களைப் படித்து இருக்கலாம்.  காட்சி ரூபமாகக் கண்டிருக்கலாம்.    டெல்லியில் வசிக்க நேர்ந்ததால் லேசாக சில அக்கப்போர் கலந்த அலசல்களை  சுத்தமாக மேம்போக்காக இந்தப் பக்கத்தில் பதிந்து வந்தேன்.  இந்தப் பதிவுகளை  சில நாட்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்த்தீர்கள் என்றால் உண்மையாகவே  சுவாரசியமாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் காலமும்  வாழ்க்கையும் ஓடும் ஓட்டத்தில் காலை நடந்ததை மாலையே மறந்து விடுகிறோம்.   மாலைக்கும் இரவுக்கும் வேறொன்று புதிதாக முளைத்து எதிரில் நின்று  விளையாட்டுக் காட்டிக் கொண்டு இருக்கும்.  எனவே இந்தப் பதினொரு நாட்களில்  என்னால் முடிந்த நாட்களில் ஒருசில பதிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கத்  துவங்கினேன்.  விளையாட்டுக்கள் பற்றியும் அந்தப் போட்டிகளில் இந்தியாவின்  சாதனைகள் குறித்தும் நான் எதுவும் எழுதவில்லை.  ஏனென்றால் அவை குறித்து  எனக்கு எதுவும் தெரியாது.  புரியாது.  புரிந்து கொள்ள முயற்சிக்கவும்  இல்லை.  இங்கு நான் கொடுக்க முயற்சித்தது எல்லாமே மேம்போக்கான சில  அக்கப்போர்களைத்தான்.
டெல்லியில்  நடந்த காமன்வெல்த் விளையாட்டுக்களைப் பற்றி விளையாட்டாக எழுத  ஆரம்பித்தேன்.  விளையாட்டு பற்றி எழுதமாட்டேன் என்றும் விளையாட்டைச் சுற்றி  இருக்கும் அரசியலையும் அக்கப்போர்களைப் பற்றி மட்டுமே எழுதுவேன் என்று  சொல்லியே ஆரம்பித்தேன்.  சொன்னது போலவே அதைப் பற்றித்தான்  எழுதியிருக்கிறேன்.  நான் எழுதியதற்கும் மேல் பலமடங்கு நீங்கள்  தினசரிகளிலும் காட்சி ஊடகங்களிலும் நீங்கள் இன்னும் சுவாரசியமான பல  விஷயங்களைப் படித்து இருக்கலாம்.  காட்சி ரூபமாகக் கண்டிருக்கலாம்.    டெல்லியில் வசிக்க நேர்ந்ததால் லேசாக சில அக்கப்போர் கலந்த அலசல்களை  சுத்தமாக மேம்போக்காக இந்தப் பக்கத்தில் பதிந்து வந்தேன்.  இந்தப் பதிவுகளை  சில நாட்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்த்தீர்கள் என்றால் உண்மையாகவே  சுவாரசியமாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் காலமும்  வாழ்க்கையும் ஓடும் ஓட்டத்தில் காலை நடந்ததை மாலையே மறந்து விடுகிறோம்.   மாலைக்கும் இரவுக்கும் வேறொன்று புதிதாக முளைத்து எதிரில் நின்று  விளையாட்டுக் காட்டிக் கொண்டு இருக்கும்.  எனவே இந்தப் பதினொரு நாட்களில்  என்னால் முடிந்த நாட்களில் ஒருசில பதிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கத்  துவங்கினேன்.  விளையாட்டுக்கள் பற்றியும் அந்தப் போட்டிகளில் இந்தியாவின்  சாதனைகள் குறித்தும் நான் எதுவும் எழுதவில்லை.  ஏனென்றால் அவை குறித்து  எனக்கு எதுவும் தெரியாது.  புரியாது.  புரிந்து கொள்ள முயற்சிக்கவும்  இல்லை.  இங்கு நான் கொடுக்க முயற்சித்தது எல்லாமே மேம்போக்கான சில  அக்கப்போர்களைத்தான்.மேலும் வாசிக்க...
 
 
No comments:
Post a Comment