Wednesday, October 6, 2010

விளையாட்டு அரங்கத்துக்கு கோமணத்துடன் போகலாம்...

பிரம்மாண்டமான துவக்க விழாவுக்குப் பிறகு மூன்றாவது நாளாக விளையாட்டுக்கள் தொடர்ந்து வருகின்றன. நான் ஏற்கனவே சொன்னது போல எனக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களில் விளையாட்டு பிரதானமானது. எந்த விளையாட்டைப் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆண்டவனின் அலகிலா விளையாட்டைப் போலவே பூமியில் விளையாடப்படும் எந்த விளையாட்டும் எனக்குப் புரிந்தது இல்லை. படிக்கும் காலத்திலேயே விளையாட்டு மைதானத்துக்கு வெளியே நின்று வெட்டி அரட்டை அடித்துப் பொழுது போக்கிய பாவத்தின் விளைவு இது.

விளையாட்டுக்குக் கூட விளையாட்டு மைதானம் பக்கம் போகாத ஜென்மம் நான்.

சரி. இப்போது விஷயம் அதுவல்ல. திங்கட்கிழமை மாலையில் இருந்து இந்தியா தங்கம் வாங்கியது. பித்தளை வாங்கியது. எவர்சில்வர் வாங்கியது போன்று தொலைக்காட்சிகளில் வரும் எந்த செய்தியும் என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. எனவே அதைப்பற்றி இங்கே எழுதப்போவது இல்லை என்றும் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன

Read more...

No comments:

Post a Comment