Thursday, June 14, 2007

திரை இசையில் ஒரு புதிய தடம் – எழிலிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்

ராகவன் தம்பி
13 ஜனவரி 2007

முதன் முறையாக இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான முறையில் இராகதேவன் தியாகப் பிரம்மத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மிக அற்புதமாக ஒரு பஞ்சரத்ன கீர்த்தனாஞ்சலியை ஏற்பாடு செய்துள்ள தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள்.


இந்த கனராக பஞ்சரத்ன கீர்த்தனையை சமர்ப்பிக்க வந்திருக்கும் அனைத்து இசை வல்லுனர்களுக்கும் ர்வலர்களுக்கும் என் வணக்கங்கள்.

தியாகபிரம்மத்துக்கு அஞ்சலி செய்யும் வகையில் அவருடைய சமாதியைப் புதுப்பித்து அங்கு ராதனைகள் நடக்க முழுமுதற்காரணமாக விளங்கிய பெங்களூர் நாகரத்தினம்மா அவர்களின் சமாதி இருக்கும் திசை நோக்கித் தலை வணங்கி என் உரையைத் துவங்குகிறேன்.

இந்த நாளின் ஒரு பிரத்யேக குணவிசேஷத்தை இங்கு உங்களுடன் நான் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சுமார் அறுபது ண்டுகளுக்கு முன் ஒருவருக்கு திருவையாறு தியாகராஜ உற்சவத்தில் சில காரணங்களுக்காக பாட இடம் மறுக்கப்பட்டது. திரைப்படங்களில் பாடுகிறவர் என்கிற காரணத்தினால் அந்த மனிதர் அங்கு சிறுமைப்படுத்தப்பட்டார். பிறகு அவர் உயிரோடு இருந்த வரையில் திருவையாறு சென்று பாடவில்லை.
அறுபது ண்டுகளுக்கு முன்னால் திருவையாறில் பாட அனுமதிக்கப்படாத அந்த எழிலிசை வேந்தர் தியாகராஜ பாகவதர் பற்றிய நினைவுச் சொற்பொழிவினை தியாக பிரம்மத்துக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்வின் முன்னொட்டாக அமைத்து தில்லித் தமிழ்ச் சங்கம் அந்த மாமனிதருக்கு அன்று நேர்ந்த ஒரு அவமதிப்பினை இன்று தலைநகரில் பிராயச்சித்தம் செய்திருக்கிறது. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் இந்த நாள் இசை ரசிகர்களால் மிகவும் பெருமையுடன் நினைத்துக் கொள்ளப்படும் நாளாக அமையும். இதற்காக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழுவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.


கர்நாடக இசையை, பல கர்நாடக இசை ராகங்களை திரைப்படங்களின் வழியாக பிரபலமாக்கியதில் பாகவதரின் பங்கு மிகவும் முக்கியமானது. திரைப்படப் பிரவேசத்துக்கு முன்னரே பாகவதர் பங்கு பெற்ற நாடகப் பாடல்கள் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு அடுத்தபடியாக பிரபலம் அடைந்து விளங்கியிருக்கின்றன. இசைமேதைகள் என்னும் தன்னுடைய நூலில் பாகவதரை ஒரு மிகவும் திறமை வாய்ந்த கர்நாடக இசைக்கலைஞராக இனம் கண்ட பெரியவர் சுப்புடு, பாகவதருக்கு அளித்திருக்கும் உன்னதமான இடம் பாகவதரின் கர்நாடக இசைத் திறமைக்கு மிகப் பெரிய கட்டியமாக விளங்குகிறது. னால் மிகவும் துரதிருஷ்டவசமாக பாகவதர் சினிமாப் பாடகராக மட்டுமே பல இடங்களில் அறியப்பட்டிருக்கிறார்.
இசையின் மீதான பாகவதரின் ஈர்ப்பு அவருடைய மிகச்சிறிய வயதிலேயே துவங்கியிருக்கிறது. திருச்சி அவருடைய சொந்த ஊர் என்று அறியப்பட்டாலும் பெற்றோர் வழியில் அவர் மாயவரத்துக்காரர். மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன் என்னும் எம்கேடி பாகவதர் சிறுவயதில் அவருடைய தந்தையின் நகைகளை நகாசு செய்யும் தொழிலில் எவ்வித ஈடுபாடும் ர்வமும் காண்பிக்கவில்லை. மிகவும் வறுமையான குடும்பச்சூழல். தந்தைக்குத் தெரியாமல் ஸ்பெஷல் நாடகங்களைப் பார்ப்பதில் ர்வம். எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகங்களைப் பார்ப்பதில் வெறி. சினிமாவும் பிடிக்கும். தந்தைக்குத் தெரியாமல் அவர் தூங்கியபின் தம்பி கோவிந்தராஜனுடன் திருச்சி சென்ட்ரல் டாக்கீசில் (இப்போது அது பிரபாத் டாக்கீஸ்) விட்டல் நடித்த ஊமைப்படத்தைப் பார்த்துவிட்டு தந்தையிடம் விசிறிக்காம்பால் அடி வாங்கியிருக்கிறார்.


பாகவதரின் தந்தையும் கலா ரசிகர்தான். சில நாடகங்களில் அவரே அயன்ஸ்திரீ பார்ட் வேடம் போட்டிருந்தாலும் தன்னுடைய மைந்தன் கலைத்துறையில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை. அக்கால சூழலில் நாடகக் கலைஞர்களுக்கு எவ்வித சமூக அந்தஸ்தும் கிடைக்காததினால் தன்னுடைய மகன் அத்துறையில் ர்வம் காட்டுவதை அவர் விரும்பவில்லை.
சிறுவன் தியாகராஜனுக்கு தந்தையாரின் தொழிலின் மீதும் படிப்பின் மீதும் ர்வம் இல்லை. தந்தை கடையில் இல்லாத போது கிட்டப்பாவின் நாடகப் பாடல்களைப் பாடிக் காட்டுவான். கடையில் மிகப் பெரும் கூட்டம் சேரும். கடைத்தெருவே அங்கு வந்து அந்த சிறுவனின் அற்புதக் குரலில் இழைந்தோடும் கார்வைகளைக் கேட்டு மயங்கியிருக்கும். இதனை தியாகராஜனின் தந்தையார் விரும்பவில்லை. அடிக்கடி அவர்களுக்குள் பிரச்னைகள் எழுந்தன. எனவே ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் கடப்பைக்கு ஓடிப்போனார். அங்கு நாடகம் நடத்திக் கொண்டிருந்த ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து மிகக்குறைந்த காலத்திலேயே மிகுந்த பிராபல்யம் அடைந்தார். அங்கு அவரைத் தேடிவந்த தந்தைக்குப் புரிந்து விட்டது. இனி ஒன்றும் செய்யமுடியாது. கலைத்தாய் தன் மகனைத் தனக்காக எடுத்துக் கொண்டு விட்டாள் என்று. மிகுந்த சமாதானம் செய்து மகனை திருச்சிக்கு மீண்டும் அழைத்துப்போனார். திருச்சிக்குத் திரும்பிய தியாகராஜன் பல இடங்களில் பாடத் துவங்கினார். முறையான பயிற்சி ஏதுமின்றி வெறும் கேள்வி ஞானத்திலேயே பல தேவாரப்பண்களைப் பாடும் அந்தச் சிறுவன் அப்பகுதியில் மிகவும் அதிகப் பிரபலம் அடைந்தான். அப்போது திருச்சியில் திருச்சி ரசிக ரஞ்சனி சபாவை நடத்திக் கொண்டிருந்த ரயில்வே அதிகாரி எ·ப்.ஜி.நடேசய்யர் (எம்.எஸ்.அம்மாவின் சேவாசதனம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்) சிறுவன் தியாகராஜனின் இசைத்திறமை குறித்துக் கேள்விப்பட்டு தன்னுடைய அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசன் வேடமேற்க அழைத்தார். தியாகராஜன் தன் தந்தையின் அனுமதியுடன் அந்நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். லோகிதாசன் வேடமேற்றிருந்த தியாகராஜன் அம்மா பசிக்குதே என்று பாடி வரும்போது பார்வையாளர்கள் பதைத்துப்போய் இந்தப் பச்சிளம் பாலகனை வதைக்கும் காலகண்டன் எங்கே என்று மேடையேறி அந்த நடிகரைத் தாக்கப் போய்விட்டார்கள். பிறகு அது வெறும் நாடகம் என்று அவர்களுக்குப் புரிய வைத்து அந்த நடிகரைத் தப்பிக்க வைத்தார்களாம். இளம் தியாகராஜனின் திறமையைப் பார்த்த மதுரை பொன்னுவய்யங்கார் அவருக்கு இலவசமாக இசை கற்பிக்க முன்வந்தார். று வருடக் கடும் பயிற்சிக்குப் பின்னர் தியாகராஜனை அரங்கேற்றம் செய்ய முனைந்தார் பொன்னுவய்யங்கார். அப்போது அபிநவ நந்திகேசுவரர் என்று அழைக்கப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையின் சீடரான மிருதங்கம் தட்சிணாமூர்த்தி ச்சாரியை மிருதங்கம் வாசிக்க அழைத்தார். இந்த சிறுவனுக்கா வாசிக்க வேண்டும் என்று மறுத்துவிட்டார் தட்சிணாமூர்த்தி ச்சாரி. இதைக்கேள்விப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தானே முன்வந்து கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க அமர்ந்ததும் தட்சிணாமூர்த்தி ச்சாரி தயக்கத்துடன் மிருதங்கம் எடுத்து வாசித்தார். பொன்னுவய்யங்கார் வயலின் வாசித்தார். மூன்று மணி நேரம் நடந்த அந்தக் கச்சேரி திருச்சியில் அனைவராலும் பாராட்டப்பட்டது. கச்சேரியின் இறுதியில் அபிநவ நந்திகேசுவரர் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி தியாகராஜனை வானளாவப் புகழ்ந்து அவருக்கு பாகவதர் என்னும் பட்டம் வழங்கினார். அன்றிலிருந்து மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன், எம்.கே.தியாகராஜ பாகவதராகப் பெயர் மாற்றம் பெற்றார்.


(பின்னர் வரும் காலங்களில் லத்தூர் சகோதரர்கள், விளாத்திகுளம் சுவாமிகள், பாபநாசம் சிவன் என்று பாகவதர் பல ஜாம்பவான்களிடம் தன் இசைத்திறமையை மெருகேற்றிக்கொண்டார்.

20ம் நூற்றாண்டின் துவக்கம் பல நாடகக் குழுக்களின் துவக்கமாகவும் அமைந்தது. ஜெகந்நாத அய்யர் பாய்ஸ் கம்பெனி, மதுரை பாலமீனரஞ்ஜனி சங்கீத சபா, ஸ்ரீபாலஷண்முகானந்த சபா. கன்னையா கம்பெனி, நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ஸ்ரீ தேவி பால விநோத சபா, வைரம் செட்டியாரின் ஸ்ரீ ராம பால கான விநோத சபா போன்ற அற்புதமான நாடகக்குழுக்கள் பிரபலம் அடைந்திருந்த நேரம். இந்த நாடகக் குழுக்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, டிகேஎஸ் சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன், காளி என்.ரத்தினம், கே.பி.கேசவன், கே.கே.பெருமாள், கே.பி.காமாட்சி, பி.யு.சின்னப்பா, எஸ்.வி.சகஸ்ரநாமம், எம்.வி.மணி, எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற பல முன்னணி நாடக நடிகர்களை அளித்தன. கே.பி.சுந்தராம்பாள், எஸ்.டி.சுப்புலட்சுமி, ரத்னா பாய், ரமணி பாய், சரஸ்வதி பாய், டி.பி.ராஜலட்சுமி போன்ற பெண் நடிகைகளும் முன்னணியில் இருந்தனர். கிட்டப்பாவுக்கு கே.பி.சுந்தராம்பாள் இணையானது போல நாடகங்களில் பாகவதருக்கு எஸ்.டி.சுப்புலட்சுமி இணையானார். பின்னாளில் எஸ்.டி.சுப்புலட்சுமி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தையும் கே.பி.சுந்தராம்பாள் கிட்டப்பாவையும் மணந்து கொண்டனர்.

பாகவதர் நடித்த முதல் நாடகம் பவளக்கொடி. ண்டு 1926. அதிகமான நாடகங்களை எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் இணைந்து நடித்தார். நடராஜ வாத்தியார் மற்றும் நரசிம்ம ஐயங்கார் போன்ற நாடக ஜாம்பவான்களிடம் நாடகப் பாடங்களைக் கற்றார் பாகவதர்.

அவர் எந்தக்குழுவிலும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. அவர் நடித்த நாடகங்கள் ஸ்பெஷல் நாடகங்கள் என்று அழைக்கப்பட்டன. பாகவதருக்கு ஒரு குறை இருந்தது. அது தனக்கு உத்வேகமாக இருந்த எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் ஒரு நாடகத்தில் இன்னும் நடிக்கவில்லையே என்பது. அந்த வாய்ப்பும் வந்தது. கிட்டப்பாவுடன் நாரதராக நடித்துக்கொண்டிருந்த எஸ்.ராதாகிருஷ்ண பாகவதருக்கு உடல்நிலை சரியில்லாது போனதால் அவரிடத்தில் கிட்டப்பாவுடன் பாகவதர் நடிக்கவேண்டும் என்று அழைப்பு வந்தது. நாடகம் நெருங்கும் சமயம் கிட்டப்பா என்ன நினைத்தாரோ பாகவதர் வேண்டாம் என்றும் ராதாகிருஷ்ண பாகவதர் உடல்நிலை தேறியதும் அவரை வைத்தோ நாடகம் நடத்தலாம் என்றும் சொல்லிவிட்டார். இது ஒரு பெருங்குறையாக பாகவதருக்கு இருந்தது. இது நடந்து சில நாட்களுக்குப்பின் செங்கோட்டையில் பாகவதர் நடித்த வள்ளி திருமணம் நாடகம் பார்க்க கிட்டப்பா சென்றிருக்கிறார். பாகவதர் தன் எல்லா நாடகங்களிலும் மேடையில் பிரவேசிக்கும்போது பாடி வரும் பிரவேசப்பாட்டு தியாகராஜ சுவாமிகளின் ஏதாவது ஒரு கீர்த்தனை. அன்று அவர் பாடி வந்து கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த ராமா நீயெட பிரேம ரசிகலுகு நீ நாம ருசி தெலியுனா. கிட்டப்பா தன்னையறியாது வாய்விட்டு உரக்கக் கத்தினார் - ஒன்ஸ் மோர். பாகவதரும் முழுப்பாடலையும் அவருக்காக மீண்டும் மீண்டும் - மூன்று முறை பாடியிருக்கிறார். மேடையேறி அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்ட கிட்டப்பா தான் அணிந்திருந்த பவளங்கள் பதித்திருந்த தங்கச் சங்கிலியை பாகவதர் கழுத்தில் அணிவித்து பாகவதர் பட்டத்துக்கு மிகவும் பொருத்தமானவர் இவரே என்று மனம் விட்டுப் பாராட்டிச் சென்றார். பாகவதரின் நாடகங்களுக்கு தேவுடு ஐயர் ர்மோனியம் வாசித்தார். பின்னாளில் பாகவதரின் பல படங்களுக்கு இசையமைத்த ஜி.ராமநாதனும் அவர் நாடகங்களில் ர்மோனியம் வாசித்து இருக்கிறார். (எஸ்.ஜி.கிட்டப்பாவின் எவரனியில் தேவுடு ஐயர்). பாகவதர் தமிழகத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் வசித்த உலகின் பல பகுதிகளிலும் தன்னுடைய நாடகங்களை எடுத்துச் சென்றார். பாகவதரின் நாடகங்களுக்கான பிராபல்யத்தை ஓரிரு சம்பவங்களின் வழி சொல்லலாம் என்று தோன்றுகிறது.

புதுக்கோட்டை பிரகதாம்பாள் தியேட்டரில் வள்ளி திருமணம் நாடகம் நடக்க இருந்தது. ஊரெங்கும் பெருமழை. கூட்டம் வராது என்று கான்டிராக்டர் ஓடி விடுகிறார். மழை வெள்ளம் தியேட்டருக்குள் பெருகுகிறது. நாளை நாடகம் போடுகிறேன் என்கிறார் பாகவதர். னால் மக்கள் அவரை விடவில்லை. ஊர் மக்கள் நடிகர்களுக்குக் குடை பிடிக்க பெருமழையில் நனைந்து கொண்டே விடிய விடிய அந்த நாடகம் புதுக்கோட்டையில் நடந்தேறியது. அதே போல சேலம் பொருட்காட்சியில் நாடகம் நடந்தபோது யிரக்கணக்கில் மக்கள். மின்சாரக் கம்பங்களில் தொங்கிக் கொண்டும் நாடகம் பார்க்கிறார்கள். அந்தக் களேபரத்தில் மின்சாரம் தாக்குண்டு இருவர் அதே இடத்தில் மாண்டு போகின்றனர். அவர்களின் குடும்பத்துக்குப் பெருந்தொகையை எவ்விதப் பத்திரிகை விளம்பரமும் இன்றி அளித்தார் பாகவதர். அதே போல ஈரோட்டில் ஒரு முறை அவரைச் சூழ்ந்த பெண்களின் கூட்டத்தைக் கலைக்க போலீசார் பெருத்த தடியடியைக் கையாளவேண்டியதாயிற்று.

நாடகத்துக்குச் சொன்னது போலவே தமிழ்த் திரையுலகின் ரம்ப காலகட்டங்களில் திரைப்படங்களை இசைமேதைகளே க்கிரமித்துக் கொண்டு இருந்தனர். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், வித்வான் ஸ்ரீனிவாச ஐயர், மன்னார்குடி நரசிம்ம ஐயங்கார், மாதிரிமங்கலம் நடேச ஐயர், மகாராஜபுரம் விசுவநாத ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், துறையூர் ராஜகோபால சர்மா, வி.வி.சடகோபன், எம்.எம்.மாரியப்பா, தண்டபாணி தேசிகர், கொத்தமங்கலம் சீனு. கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்தகோகிலம் போன்ற அரிய இசைமேதைகள். னால் இவர்களில் பலரும் திரையுலகில் இருந்து சிறிதாக மங்கிப்போயினர். னால் தன் திரையுலக வாழ்வு முழுதும் சீரான புகழ் பெற்று விளங்கியவர் பாகவதர் ஒருவரே. அவருடைய மேடை நாடகம் பவளக்கொடி 1934ல் திரைப்படமானது. அதைத் தொடர்ந்து பத்து ண்டுகள் திரும்பிப் பார்க்க நேரமின்றி திரைப்படங்களில் புகழைக்குவித்தார். வெறும் ஒன்பது படங்களில் அவர் அடைந்த புகழை இதுவரை வேறு எந்த நடிகனும் பெறவில்லை. அவர் நடித்த ஹரிதாஸ் சென்னையில் நான்கு தீபாவளிகளைக் கண்டது. அதே போல அவருடைய சிந்தாமணி திரைப்படத்தை வெளியிட்ட மதுரை முருகன் டாக்கீஸ் உரிமையாளர், சிந்தாமணி படத்தில் கிடைத்த லாபத்தை வைத்து இன்னும் ஒரு பெரிய திரையரங்கைக் கட்டினார். அதற்கு சிந்தாமணி என்றே பெயர் வைத்தார். பாகவதர் பெரிய நடிப்புத் திறன் வாய்ந்தவர் அல்ல. அவருடைய காலத்தில் நடிகர்கள் எல்லோருக்கும் பாடும் திறமை வேண்டியிருந்தது. அவர் கொடுத்த முதல் கிராமபோன் ரிகார்டு அவருடைய சாரங்கதாரா திரைப்படத்தில் வரும் சுருட்டி ராகத்தில் அமைந்த சிவபெருமான் கிருபை வேண்டும் என்னும் பாடல். நான் ஏற்கனவே சொன்னதுபோல, கர்நாடக இசைக்குத் தன் திரைப்படங்களில் பெரிதும் முக்கியத்துவம் அளித்தவர் பாகவதர். சாருகேசி ராகத்தை கர்நாடக இசைப்பிரியர்களின் இடையில் பிரபலம் க்கியவர் பாகவதரே. தியாகராஜ சுவாமிகளே ஒரே ஒரு கீர்த்தனையைத்தான் சாருகேசியில் அமைத்திருக்கிறார். அப்போது இந்த ராகம் கச்சேரிகளில் அவ்வளவாகப் பிரபலமாகாத ராகம். பாகவதரின் மன்மத லீலையை வென்றார் உண்டோ பாடலுக்குப்பின் சாருகேசியை முணுமுணுக்காத உதடுகள் தமிழகத்தில் இல்லை என்றானது. அதைத் தொடர்ந்து டிஎம்எஸ் பாடிய வசந்தமுல்லை போலே வந்து பாடலும் எம்.எல்.வசந்தகுமாரியின் டல் காணீரோவும் சாருகேசியில் துலங்கியது.

கச்சேரிகளில் பிரபலமாக இருந்த பல பாடல்களை அதே சாயலில் தன் திரைப்பாடல்களுக்காக பிரயோகித்தார் பாகவதர். தண்டபாணி தேசிகர் பாடிப் பிரபலப்படுத்திய ஜெகஞ்ஜெனனி சுகவாணி கல்யாணி என்னும் ரதிபதிப்பிரியா ராகத்தில் அமைந்த பாடலை மனம் கனிந்தே என்று தன் படத்தில் பிரபலப்படுத்தினார். ஜோன்புரி ராகத்தில் பாடப்படும் எப்போ வருவாரோ என்னும் பாடல் சத்வகுணபோதன் னது. (மணி ஐயர் சம்பவம்). பஜனை சம்பிரதாயத்தில் பிரபலமான காபி ராகத்தில் அமைந்த ஜானகி ரமணா (ஜேசுதாஸ்) கீர்த்தனையை தியானமே எனது மனது நிறைந்தது சந்திரபிம்ப வதனம் என்று பாடினார்.

ஒரே ராகத்தில் பலவித பாவங்களை அமைத்துப் பாடியதில் மன்னனாக விளங்கினார். சிந்துபைரவியில் வரும் வதனமே சந்திரபிம்பமோ என்று மிக லாவகமாக சந்தோஷ லாகிரியில் பாடிய அதே பாகவதர் அதே ராகத்தில் வன்பசி பிணி போன்றும் பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் புண்ணியமின்றி விலங்குகள் போல் என ழமான தத்துவார்த்தமான பாடல்களை மிகுந்த பாவத்துடன் பாடினார். வள்ளலைப் பாடும் வாயால் செஞ்சுருட்டியில் அமைந்த பக்திப் பாடல். அதே ராகத்தில் (முதல் பாதி பாடல்) சிருங்காரமான ராதே உனக்குக் கோபம் காதேடி. அவருக்கு மிகவும் பிடித்தமான கமாஸ் ராகத்தில் இருவகையான பத்ததியில் பாடியிருக்கிறார். ஒரு நாள் ஒருபொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும் -
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர்...
பாபநாசம் சிவன், பாகவதர் மற்றும் ஜி.ராமநாதன் போன்ற மூன்று இமயங்கள் ஒன்றிணைந்து திரை இசையில் காவியங்களை வடித்துக் கொண்டிருந்த காலம் அது என்று சொல்லலாம். தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே... கிருஷ்ணா முகுந்தா முராரே... போன்ற பாடல்கள் எக்காலத்தும் மனதில் ரீங்கரித்து நிற்பவை. மறைவாய் புதைத்த ஓடு, உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ... சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே.. ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே... அன்னையும் தந்தையும் தானே... மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்... போன்றவற்றை இப்போது நான் சொல்லும்போதே எத்தனை பேர்களின் உதடுகளும் உள்ளங்களும் உச்சரித்து வருகின்றன என்பதை நாம் அறிவோம்.


புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் அவர் பலரின் மனங்களைக் கவர்ந்த காந்தமாக இருந்தார். அவரை நேரில் பார்த்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம் - வானில் இருந்து இறங்கி வந்த தேவனைப் போல விளங்கினார் என்று சொல்வார்கள். தங்கத் தட்டில் உணவினை உண்டார். அக்காலத்தில் அதிகம் பேசப்பட்ட மோட்டார் கார்களை விலைக்கு வாங்கினார். மிக விலை உயர்ந்த குதிரைகளை வைத்திருந்தார். ஒரு அரசனைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்தவர் பாகவதர். அவருடைய ரசிகர்கள் பலர் அவருடைய காலடி மண்ணை சேகரித்தும் பாகவதர் கைபட்ட பொருட்களுக்கு முத்தம் கொடுத்தும் அன்பினைக் காட்டினார்கள். அவர் பயணித்த ரயில் வண்டிகளை ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நிறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவரைப் பாடவைத்து பின்னரே அந்த ஸ்டேஷனில் இருந்து ரயிலை வெளியே விட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. (ரயில்வே கிராசிங் சம்பவம்) தேவகோட்டைக்கு ஒரு கச்சேரிக்கு அவர் சென்றபோது அவரை பல குதிரைகளால் அலங்கரித்த கோச்சில் அமரவைத்து மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்த ஊர்வலத்தின் நீளம் இரண்டு மைல்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.கந்தர்வ கான ரத்னா. சப்தஸ்வர விஷாரதா. சங்கீத கலா சாகரா. ஏழிசை மன்னர், இசை நாடகப்பேரொளி, போன்ற பல விருதுகளை அடைந்தவர் பாகவதர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பாகவதரின் பல படங்களில் மிகச் சிறிய வேடங்களில் தோன்றியிருக்கிறார். பாகவதர் மேல் பெரும் மதிப்பு வைத்திருந்தார். திருச்சியில் ஒரு கலையரங்குக்கு பாகவதர் பெயரை வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார் எம்.ஜி.ர். திருச்சி வானொலி நிலையத்தில ஏ கிரேடு வித்வானாக கடைசி வரையில் இருந்தார் பாகவதர். திருச்சி அகில இந்திய வானொலியில் பணியாற்றிய திரு.சங்கரன் அவர்கள் மிக அற்புதமான பதிவு களை செய்து வைத்திருக்கிறார். சங்கீத கலாநிதி டி.எல்.வெங்கடராம ஐயர் முத்துசுவாமி தீட்சிதரின் நவாவர்ண கீர்த்தனைகள் குறித்து ய்வுகளை மேற்கொண்டவர். பாகவதர் புகழின் உச்சியில் இருந்தபோது அவரை சந்திக்க வேண்டும் என்று சைப்பட்டு திருச்சி வானொலி நிலையம் வழியாக அவரை சந்திக்கிறார். அப்போது பாகவதர் அவருக்கு தீட்சிதரின் நாககாந்தாரி ராகத்தில் அமைந்த ஸரசிஜநாப சோதரி கீர்த்தனையைப் பாடிக் காண்பிக்கிறார். அப்போது அந்தக் கீர்த்தனை அவ்வளவு பிரபலம் அடையாது இருந்தது. பாகவதர் பாடிக்காண்பித்த முறையும் ஸ்வராவளியும் ஐயரின் ய்வுக்கு மிகவும் பயன்பட்டதாக அவர் பதிவு செய்திருக்கிறார். பாகவதரை வெறும் சினிமாப் பாட்டுக்காரர் என்று இன்றும் கருதும் யாரேனும் மகானுபாவர்கள் இந்த சபையில் இருந்தால் அவர்களின் கவனத்துக்கு இந்தப் பதிவினை மிகவும் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

புகழின் உச்சத்தில் இருந்த நேரத்தில் 1941ம் வருடம் எழுத்தாளர் கல்கி, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மற்றும் சர்.ர்.கே.சண்முகம் செட்டியார் கியோர் பாகவதரையும் எம்.எம்.தண்டபாணி தேசிகரையும் சந்தித்து தமிழிசை வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கின்றனர். அன்றிலிருந்து பாகவதர் மேடைகளில் தெலுங்கு சமஸ்கிருதப் பாடல்களைப் பாடுவதை நிறுத்திக் கொண்டு தமிழிலேயே முழுக்கச்சேரியும் செய்யத் துவங்கினார். தமிழிசைச் சங்கத்துக்காக தேவாரப் பண்ணிசை ராய்ச்சிப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். மாநிலத்தின் பல இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழிசை மாநாடுகளில் கலந்து கொண்டார். 1943லிருந்து 1954வரை தொடர்ச்சியாக தமிழ் இசை விழாக்களில் கலந்து கொண்டார். அதே போல பாகவதரின் திருநீலகண்டர் படப்பிடிப்பு நடந்த நேரம். இரண்டாம் உலகப்போர் மூண்ட சமயம். காந்தி பிரிட்டிஷ்காரர்களுக்கு சாதகமாக இல்லை. னால் பாகவதர், உலகப்போர் வேறு இந்திய சுதந்திரப் போராட்டம் வேறு என்று கருதினார். எனவே அப்போது கவர்னராக இருந்த சர் ர்தர் ஹோப் பாகவதரிடம் போர் நிதி திரட்டித் தருமாறு கேட்டபோது ஊர்ஊராக நாடகம் நடத்தி அரசுக்கு நிதி திரட்டித் தந்தார். இதனால் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அவர் மீது எரிச்சல் உற்றிருந்தார். போர் சமயத்தில் நிதி திரட்டித் தந்த பாகவதரின் சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு அவருக்கு திவான் பகதூர் பட்டம் வழங்க முன்வந்தபோது பாகவதர் அதை பணிவுடன் மறுத்தார். மேலும் பிரிட்டிஷ் அரசு அவருக்கு திருச்சிக்குப் பக்கத்தில் பட்டாவாக அளிக்க முன்வந்த 100 ஏக்கர் நிலத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்தார். அப்போது சத்தியமூர்த்தி பாகவதர் பற்றிப் புரிந்து கொண்டார். ஒரு கூட்டத்தில் சத்தியமூர்த்தி தனக்குப் போடப்பட்ட மாலையை பாகவதருக்கு அணிவிக்க முன்வந்தார். அதைக் குனிந்து பெற்றுக்கொள்ள பாகவதர் முனைந்தபோது அவருடைய பட்டு அங்கவஸ்திரம் சரிந்து கீழே விழ, இன்று முதல் பட்டினை விட்டு கதர் கட்டிக்கொள்ளுங்களேன் என சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டாராம். அன்றிலிருந்து இறுதிவரை கதராடையை மட்டுமே உடுத்தினார் பாகவதர். (கே.சுப்பிரமணியம் - ரயில் பயணம் - வங்காளப் பெண்மணி - நகைகளை விட்டது). ஒரு முறை நேரு, காமராஜருடன் திருச்சியில் திறந்த ஜீப் ஒன்றில் ஊர்வலம் போயிருக்கிறார். அவர்களை வணங்க வாசலுக்கு வந்தார் பாகவதர். அப்போது திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து வியந்த நேருவிடம் ''இது நமக்காகத் திரண்ட கூட்டம் என்று நினைத்துவிடாதீர்கள். இந்த மனிதருக்காகக் கூடிய கூட்டம் இது என்றிருக்கிறார். நேரு பாகவதரிடம் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் நிற்கும்படிக் கூற பாகவதர் அரசியலில் தனக்கு ஈடுபாடு இல்லை என்று சொல்லி மறுத்துள்ளார்.


பாகவதரின் ஹரிதாஸ் படம் 100 0 நாட்கள் பிராட்வே தியேட்டரில் ஓடியது. இந்த சாதனை இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் முறியடிக்கப்படவில்லை.
இந்த காலகட்டத்தில் இந்துநேசன் என்று ஒரு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. பிரபலங்களைப் பற்றிய அந்தரங்க செய்திகளை வெளியிட்டு அவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையை அதன் சிரியர் லட்சுமிகாந்தன் என்பவர் செய்து வந்தார். புகழின் உச்சியில் இருந்த பாகவதர் பற்றியும் என்எஸ்கே பற்றியும் தாறுமாறாக செய்திகள் வெளியிட்டு வந்தார். இருவரும் லட்சுமிகாந்தனை கண்டுகொள்ளவில்லை. 1944ம் ண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி காலை 10 மணியளவில் சென்னை வேப்பேரியில் ஒரு ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தபோது லட்சுமிகாந்தன் சிலரால் கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட லட்சுமிகாந்தன் நன்றாகவே இருந்துள்ளார். சாதாரண நிலையில் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தவர் நவம்பர் 9ம்தேதி காலை மர்மமான முறையில் இறந்து போனார். இது நடந்து பல நாட்களுக்குப்பின் டிசம்பர் 27ம் தேதி தமிழிசைச் சங்கத்தில் கச்சேரி முடித்து வந்த பாகவதர் கைது செய்யப்பட்டார். கலைவாணரும் வீட்டில் கைது செய்யப்பட்டார்.


பாகவதர் மற்றும் கலைவாணர் கிய இருவரின் அந்தரங்க வாழ்க்கையை கொலையுண்ட லட்சுமிகாந்தன் எழுதியது மட்டுமே இவ்விருவரின் கைதுக்கு தாரமாக இருந்திருக்கிறது. இந்த வழக்கில் வி.டி.ரங்கசாமி ஐயங்கார், ராஜகோபாலாச்சாரியார், பிராண்டல், கே.எம்.முன்ஷி போன்ற மிகப்பெரிய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவருக்கும் யுள் தண்டனை கிடைத்தது. இதை எதிர்த்து இருவரும் பிரிவி கெளன்சில் என்னும் மேல் கோர்ட்டுக்கு முறையீடு செய்ய இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி சென்னை உயர்நீதி மன்றத்துக்கு ணை பிறப்பிக்கப்பட்டது. வழக்கின் மேல் முறையீட்டில் எதிராஜ் என்னும் வழக்கறிஞர் திறமையாக வாதாடினார். மறுவிசாரணையில் பாகவதர் மற்றும் கலைவாணரை நிரபராதிகள் என அறிவித்து யுள் தண்டனை ரத்து செய்யப்பட்டு 1947 ஏப்ரல் 25ம்தேதி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

எந்தக் குற்றமும் செய்யாமல் யுள் தண்டனை விதிக்கப்பட்டு 2 ண்டுகள் 2 மாதங்கள் 13 தினங்கள் சிறையில் இருந்த பாகவதருக்கு அவர் வாழ்க்கையை பாதித்த பல சம்பவங்கள் நிகழ்ந்தன. ஹரிதாசுக்கு முன்னால் ஒவ்வொரு படமாக ஒப்புக்கொள்ளும் பழக்கம் இருந்த பாகவதர் தயாரிப்பாளர்களின் நெருக்கடி தாளாது சுமார் ஒன்பது படங்களை ஒப்புக்கொண்டு முன்பணம் வாங்கியிருந்தார். முன்பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் பாகவதருக்கு தீவாந்திர தண்டனை கிடைக்கப்போகிறது - அவர் எங்கே நடிக்கப்போகிறார் என்று கொடுத்த பணம் கேட்டு நெருக்க ரம்பித்தனர். பாகவதர் உறவினர்களை சிறைக்கு அழைத்து தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுக்கொண்டார். அப்படியே அவர்களும் செய்தார்கள். பாகவதர் விடுதலையானதும் மீண்டும் பணப்பெட்டிகளுடன் முதலாளிகள் சிறைக்குப் படையெடுத்தனர். அவர்களிடம் இனி தான் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டு வடபழனி முருகன் கோவிலுக்கு நேராகச் சென்று முருகனை வணங்கினார். சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்ததும் அவரது நெடுங்கால நண்பரான அண்ணாத்துரை தான் கதை வசனம் எழுதிய சொர்க்கவாசல் படத்தில் நடிக்குமாறு பாகவதரை அழைத்தார். தான் த்திகன் என்றும் நாத்திகவாதம் பேசும் அண்ணாத்துரையின் படங்களில் தன்னால் நடிக்க இயலாது என்று பணிவாக மறுத்தார். அதேவேளையில் அண்ணாத்துரையை தேடிச் சென்று அவருக்காக அவருக்குப் பிடித்த வேதாந்தப் பாடல்களை பாடிக்காட்டுவார்.
சிறைவாசத்துக்குப்பின் பாகவதர் சற்று பணக்கஷ்டத்தில் இருப்பதைகக் கண்டு சிவாஜிகணேசன் நடித்த அம்பிகாபதி படத்தில் கம்பர் வேடத்தில் சிவாஜி கணேசனை விட 10000 ரூபாய் அதிகம் கொடுத்து நடிக்க அவரை அழைத்தபோது மறுத்துவிட்டார் பாகவதர்.


அப்போது நடிகர் டி.ர்.மகாலிங்கம் தன் மகன் சுகுமாரனை பள்ளியில் சேர்க்க ஒரு விழா எடுத்தார். அந்த விழாவில் பாகவதர் பாடினார். பாகவதருக்கு சன்மானமாக 1000 ரூபாயை தட்டில் வைத்துக்கொடுத்தார் மகாலிங்கம். பாகவதர் அந்த யிரம் ரூபாயுடன் ஒரு ரூபாயை வைத்து சுகுமாரனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார். சிறைவாசத்துக்குப் பின் 1948ல் பாகவதர் ராஜமுக்தி என்னும் படத்தைத் தயாரித்தார். புதுமைப்பித்தன் அதற்குக் கதை வசனம் எழுதினார். படம் படுதோல்வியடைந்தது. அவருடைய பதினோராவது படம் அமரகவி. சுமாரான வெற்றியடைந்தது. அவருடைய இறுதி மூன்று படங்கள் சியாமளா, புதுவாழ்வு, சிவகாமி கிய மூன்று படங்களும் படுதோல்வியடைந்து அவருடைய சினிமா உலக வாழ்க்கை அஸ்தமனம் பெற்றது. பாகவதரின் சினிமா வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் 1947லிருந்து 1952 வரை நிகழ்ந்த பெருமளவு மாற்றங்கள். நிலப்பிரபுத்துவம் சார்ந்த மதிப்பீடுகள், தெய்வபக்தி, மாட்டு வண்டி ஓட்டுபவரும் கர்நாடக சங்கீதம் பாடும் ரசனை, இரவு முழுவதும் நாடகம், கச்சேரி கேட்கும் வழக்கம் என்பனவெல்லாம் மாற்றம் அடைந்து திராவிட இயக்க மதிப்பீடுகளும், திராவிட இயக்கம் சார்ந்த ரசனைகளும் முன்னணிக்கு வந்ததே பாகவதரின் சினிமா வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும். மேலும் அந்தக் காலகட்டத்தில்தான் சினிமா தொழில் ரீதியாக பெரும் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. பின்னணி பாடும் முறை வழக்கத்துக்கு வந்தது. பாடகர் மட்டுமே நடிகர் கமுடியும் என்னும் வழக்கம் முடிவுக்கு வந்தது. தமிழ் சினிமாவில் அடிப்படையான மாற்றங்கள் பல வந்தன.

சினிமாவை விட்டு இசைக்கச்சேரிகளில் கவனம் செலுத்த விரும்பினார் பாகவதர். னால் தமிழில் மட்டுமே பாட வேண்டும் என்கிற அவருடைய பிடிவாதத்துக்கு இடம் கொடுப்பவர்கள் யாரும் இல்லாமல் போனார்கள். எனவே சினிமா, இசை என்ற இரண்டு இடங்களிலும் அநியாயமாகப் புறக்கணிக்கப்பட்ட பாகவதர் தன் நண்பரான சேலம் நாகரத்தினத்துடன் யாத்திரை கிளம்பினார். வழியில் அவருக்குக் கண்பார்வை போனது. புட்டபர்த்தி சென்று பாபாவை வழிபட்டார். அவருடைய நண்பர் நாகரத்தினம் பாபாவிடம் ''எனது நண்பர் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறார் என்று சொல்ல றுமாதங்களில் எல்லாம் முடிந்து போகும் என்கிறார் பாபா. பாபாவை தரிசனம் செய்ய ஐந்து நிமிடங்கள் பார்வை வேண்டுமே என்கிறார் பாகவதர். பார்வை கிடைக்கிறது. தரிசனம் னதும் போதுமா என்று கேட்கிறார் பாபா. போதும் என்கிறார் பாகவதர். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறார்.
1959ம் ண்டு நவம்பர் முதல் தேதி நோய்வாய்ப்பட்டிருந்த பாகவதர் தன் இறுதி மூச்சினை விடுகிறார்.


மிகப்பெரிய சகாப்தம் ஒன்று முடிவுக்கு வந்தது. தன்னுடைய பாடல்களில் - இசையில் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார் பாகவதர்.
முடிக்கும் முன் மனவேதனையுடன் ஒரு விஷயத்தை சொல்லி முடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. லட்சுமிகாந்தன் கொலை இன்று வரை முடிவுக்கு வராத ஒரு மர்மமாகத்தான் உள்ளது. வழக்கை மறுவிசாரணை செய்த நீதிபதிகளில் ஒருவர் குறிப்பு ஒன்றினை எழுதியிருக்கிறார் -பாகவதருக்கு எதிராக சாட்சியமாக சமர்ப்பிக்கப்பட்ட, கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் அந்தக் கத்தியால் ஒரு எலியைக் கூடக் கொல்ல முடியாது''.


நன்றி.

வணக்கம்.


No comments:

Post a Comment